This is BeyondWords's Typepad Profile.
Join Typepad and start following BeyondWords's activity
BeyondWords
பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.
Interests: இசை, இலக்கியம், தமிழ், மிருகங்கள்
Recent Activity
நந்தாதேவி - சிறுகதை
இந்த கதை எழுத காரணமாக இருந்தவர் மேஜர் நந்து ஜயால். டெஹ்ரடூனில் உள்ள இந்திய மலையேறிகளின் பள்ளிக்குத் தலைச்சன் பிள்ளை. அவரது மலையேறும் அனுபவங்களை 2010ஆம் ஆண்டு படித்தேன். துரதிர்ஷ்டமாக இள வயதிலேயே இறந்துவிட்டாலும், இன்றும் அப்பள்ளியிலிருந்து வெளியேறி பல மலை உச்சிகளை அடையும் வீரர்கள் மேஜர் நந்து ஜயாலை மறப்பதில்லை என்பதை பலரது அனுபவங்களைத் தொகுத்தளித்த Indian Mountaineering School, Dehradun எனும் புத்தகத்திலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது. ** நன்றி : சொல்வனம். http://solvanam.com/?p=25545 Continue reading
Posted Dec 13, 2013 at வார்த்தைகளின் விளிம்பில்
Comment
1
இருள் முனகும் பாதை - இறுதிப் பகுதி.
Posted Jan 29, 2013 at வார்த்தைகளின் விளிம்பில்
Comment
0
இருள் முனகும் பாதை - 7
Posted Jan 28, 2013 at வார்த்தைகளின் விளிம்பில்
Comment
3
இருள் முனகும் பாதை - 6
Posted Jan 27, 2013 at வார்த்தைகளின் விளிம்பில்
Comment
0
இருள் முனகும் பாதை - 5
Posted Jan 26, 2013 at வார்த்தைகளின் விளிம்பில்
Comment
0
இருள் முனகும் பாதை - 4
Posted Jan 25, 2013 at வார்த்தைகளின் விளிம்பில்
Comment
0
இருள் முனகும் பாதை - 3
Posted Jan 24, 2013 at வார்த்தைகளின் விளிம்பில்
Comment
0
இருள் முனகும் பாதை - 2
Posted Jan 23, 2013 at வார்த்தைகளின் விளிம்பில்
Comment
0
இருள் முனகும் பாதை - 1
Posted Jan 22, 2013 at வார்த்தைகளின் விளிம்பில்
Comment
0
Spring, Summer, Autumn, Winter
Posted Jan 2, 2013 at வார்த்தைகளின் விளிம்பில்
Comment
0
கவிஞர் தேவதேவனுக்கு விஷ்ணுபுரம் விருது 2012
Posted Dec 11, 2012 at வார்த்தைகளின் விளிம்பில்
Comment
0
ஆம்னிபஸ் - ஜொனாதன் லிவிங்ஸ்டன் எனும் கடற்புள்ளு
நண்பர் பாஸ்கர் ரொம்ப நாட்களாக ஆம்னிபஸ் தளத்தில் நடக்கும் புத்தக விமர்சன முயற்சிகள் பற்றி குறிப்பிட்டு வந்துள்ளார். தினம் ஒரு புத்தகத்தைப் பற்றி எழுதுவது என்பது சாதாரண காரியமல்ல. அதுவும் ஆம்னிபஸ் தளத்தில் எழுதப்படும் பலவகையான புத்தகங்களைப் பார்க்கையில் சமயத்தில் பொறாமைகூட வந்துவிடுகிறது. தினம் சமையலா என முணுமுணுப்பதைக் காட்டிலும் தினம் சாப்பிட வேண்டுமா என கேள்வி கேட்பவர் குறைவு என்பதை நமது ஹோட்டல்களில் கூடும் கூட்டத்தை வைத்தே சொல்லிவிடமுடியும். அது போலத்தான் இந்த தளத்தை நடத்தும் அன்பர்கள் யாரும் சாப்பிட முணுமுணுப்பதில்லை, சமைப்பதில் ரோட்டா போட்டு ஒவ்வொருவர் ஒரு நாள் எனப் பிரித்துக்கொண்டிருப்பதால் பெரும் பாரமாகத் தெரிவதில்லை என்றார். மிக மகிழ்ச்சியான விஷயம். இங்கிலாந்துப் பகுதியில் கூடும் பறவைகள் பற்றி முன்னர் வலைப்பதிவில் எழுதியிருந்தேன். How to be a bad birdwatcher எனும் புத்தகத்தைப் படித்தபின் பறவைகளைக் கவனிப்பதில் (எலெக்ட்ரிக் கம்பியைப் பார்ப்பது போல ஏனோ பறவைகளைப் பார்ப்பது... Continue reading
Posted Nov 22, 2012 at வார்த்தைகளின் விளிம்பில்
Comment
5
அபிஷேக் ரகுராம்
Posted Oct 28, 2012 at வார்த்தைகளின் விளிம்பில்
Comment
2
ஏன் ஒரு மாபெரும் ஆபரா பிறக்கவில்லை?
கிரேக்கத்துக்குப் போய் தமிழிசை யுடர்ன் அடித்தது என பக்கிரிசாமி பாரதி சொல்வதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பார்த்தால் மேற்கிசை, இந்திய செவ்வியல் இசை இரண்டும் பாடல் வரிகளை ஒலி வடிவமாக வெளிப்படுத்துவதில் தான் பல்லிசையாக உருவானது. சிவனடியார் ஆறுமுகசாமி, அரையராக வடிவெடுத்த ராமபாரதி என இன்றும் அது ஆரம்பகால வடிவில் இருக்கு. நான் பார்த்தது ஸ்ரீரங்கம் அரையர் கோஷ்டி தான்- அதில் ஒரு கோஷ்டி முதல் வரியைப் மேல் ஸ்ருதியில் பாட, மற்றொரு கோஷ்டி இடைபுகுந்து கீழ் ஸ்ருதியில் அடுத்த வரியைப் பாடத் தொடங்கும். இது ஒலிவடிவில் ஹார்மனியின் பாணி. ஏற்ற இறக்கங்களோடு அவர்கள் பாடும்போது தனித்தனியாக கேட்பதை விட இன்னும் அதிக இனிமையாக இருக்கும். ஆனால் இடையில் எங்கோ இந்த பாணியில் பாடுவது பெரிதளவு தொலைந்துவிட்டதாகத் தோன்றுகிறது. இன்றும் ஓதுவார்கள், அரையர் கோஷ்டிகளில் இதன் ஆரம்பகால வடிவைக் கேட்கலாம். ஆனாலும், மக்கள் இசையில் பெரிதளவு புழங்கவில்லை. ஏன்? திட்டவட்டமாக இதுதான்... Continue reading
Posted Oct 4, 2012 at வார்த்தைகளின் விளிம்பில்
Comment
0
'சற்று முன்பு' - ஊழித் தாண்டவம்.
ஆறு மாதங்களாக ஆறப்போட்ட தளத்தை 'சற்று முன்பு' பாடல் திறக்க வைத்துவிட்டது. வேலை கிடைக்க மூன்று மாதங்கள் அலைக்கழிய, கிடைத்த வேலை ஒரு மாதமாக புரட்டி எடுத்துக்கொண்டிருக்கிறது. இதற்கு நடுவில் 'நீ தானே என் பொன்வசந்தம்' படப்பாடல் வெளியீடு. ராஜா இசை வந்தவுடன் வெளியாகும் புராணங்கள் சிறிதும் ஏமாற்றாமல் வந்துவிட்டன. 'செந்தூரப்பூவே செந்தூரப்பூவே பாடல் மாதிரி இல்லைங்க' என்பது முதல் 'ராஜாவெல்லாம் அடங்கிப் போய் மாமாங்கம் ஆச்சுங்க' என கோச் வண்டி போல வரிசையாக விமர்சனம் ஒரு பக்கம். இன்னொரு எல்லையில் ராஜா எது போட்டாலும் தேவகானம் தான் என கொக்கரித்து விசில் அடிக்கும் ரசிகர்களின் அதீதக் கொண்டாட்டம். இடைபட்ட கூட்டுரோட்டில் பாடலைக் கேட்டு ரசித்தவர்கள் கூட என்ன சொல்வது, எப்படி சொல்வது என மற்றவர்களது ரியாக்ஷனுக்காக காத்திருந்தது என வழக்கமாக ராஜா இசைக்கு வரும் சகல வரவேற்பும் 'நீ தானே என் பொன்வசந்தம்' பாடல்களுக்கு வந்துவிட்டன. வெளியான முதல் நாளிலிருந்து... Continue reading
Posted Sep 11, 2012 at வார்த்தைகளின் விளிம்பில்
Comment
2
உப்புவேலி - மறிகடல் பாழ்பட
ஜெயமோகன் 'உலகின் மிகப்பெரிய வேலி' கட்டுரையில் குறிப்பிட்டிருந்த 'The Great Hedge of India' புத்தகத்தை நூலகத்திலிருந்து எடுத்துப் படித்தேன். இங்கிலாந்தின் சில நூலகங்களில் இது வெறும் நோக்குநூலாக மட்டும் வைத்திருக்கும் ரகசியம் புரியவில்லை. மிக மிக சுவாரஸ்யமான புத்தகம். வெள்ளைக்காரன் வந்ததால் தான் நமக்கு ரயில் கிடைச்சது, இங்கிலீஷ் படிச்சோம், நம்ம அறிவு வளர்ந்தது என ஐரோப்பா சர்வாதிகாரத்தை விதந்தோம்பும் என் நண்பர்கள், மாமாக்கள், தாத்தாக்களுக்கு பல பிரதிகள் வாங்கிச் செல்லவேண்டும் என எண்ணிக்கொண்டேன் (சீக்கிரம் தமிழில் கொண்டுவர வேண்டும் என நினைக்கிறேன், இல்லையென்றால் இதையும் வெள்ளைக்காரன் சொல்லித்தான் தெரிந்தது, இங்கிலீஷு படிச்சதினால தான தெரியவந்ததுன்னு கிளம்புவார்கள் :)) ஆங்கிலேய ஆட்சியின் சில புதிய பக்கங்களை இந்த புத்தகம் நமக்கு காட்டுகிறது. குறிப்பாக, உப்பு போன்ற மிகவும் அடிப்படையான உணவைக் கட்டுப்படுத்தும்போது பாதிப்படைந்த தலைமுறையின் நிலை என்னை மிகவும் வருத்தமாக்கியது. வியாதிக்கு குறைவிலாமல் லட்ச லட்சமாக மக்கள் மடிந்து போனதை... Continue reading
Posted Apr 3, 2012 at வார்த்தைகளின் விளிம்பில்
Comment
1
செளரிங்கி நாவலின் சிக்கல்கள்
கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு முன் எழுதிய முதல் பகுதி விமர்சனத்தைத் தொடர்ந்து இந்தப் பதிவில் முடித்துவிடும் எண்ணத்தோடு செளரிங்கி நிறைவுப் பகுதி. வெளியூர் சென்றால் இட்லி எங்கு கிடைக்கும், மிளகாய்பொடி கிடைத்ததா என என் கவலைகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளும் நண்பர் இப்படி தொடர் விமர்சனம் எழுதுவதனால் மிகவும் கடுப்பாய் இருக்கிறார் எனக் கேள்வி. நமக்கு எதற்கு வம்பு? முடிக்கும்போது முடித்துவிட்டு சுபம் போட்டுவிட வேண்டியதுதான். முதல் பகுதியில், 'செளரிங்கி நாவலில் சிக்கல் இல்லாமல் இல்லை' என இந்த பெரிய நாவலின் விமர்சனத்தை ஏதோ அம்பு குத்திட்டு தொடரும் போட்ட யவனராணிக் கதைப் போல நிறுத்தியிருந்தேன். என்ன சிக்கல் எனும் டென்ஷன் எனக்கே தாங்காததால் மேலும் காக்க வைக்காமல் அம்பில் செருகியிருந்த இலச்சியின் சாயம் மறைவதற்குள் ஓலையைப் பிரித்துவிடுகிறேன். சூரியன் அஸ்தமிக்காத ஆட்சியின் இரண்டாம் தலைநகரத்தினுடைய இதயத்துடிப்பை பல நிகழ்வுகள் பாதித்திருக்கின்றன. ஆனால், பின்காலனிய கல்கத்தாவின் கதையான இந்த நாவலில் பிரிவினை... Continue reading
Posted Mar 21, 2012 at வார்த்தைகளின் விளிம்பில்
Comment
2
வரலாற்றோடு ஒரு ஒப்பந்தம்:வாக்னரும் நானும்
கடந்த சொல்வனம் இதழில் வெளியான ‘வரலாற்றோடு ஒரு ஒப்பந்தம்: வாக்னரும் நானும்’ எனும் விவரணப்படத்தின் அறிமுகம் இங்கே. ஐரோப்பிய சாஸ்த்ரிய இசையின் மிக முக்கியமானத் திருப்புமுனை வாக்னர் முதல் தொடங்கியது எனலாம். வாக்னரைப் பற்றித் தெரிந்துகொள்வது இசையைப் பற்றித் தெரிந்துகொள்ளும் முயற்சி மட்டும் அல்ல. அது ஐரோப்பிய வரலாற்றின் முக்கியமான போக்கையும் தெரிந்துகொள்ள நமக்குக் கிடைத்திருக்கும் முக்கியமான அலகும் கூட. இத்தனைக்கும் இஸ்ரேலில் இவரது இசை தடை செய்யப்பட்டுள்ளது. பல யூத குடும்பங்களில் உள்ள இன்றைய தலைமுறையினர் கூட மானசீகமாக அவரது இசையை கேட்காமலேயே வெறுக்கத் தலைப்படுகின்றனர். ஆனாலும் மேற்கத்திய இசையில் மட்டுமல்லாது, ஜெர்மன் நாட்டு தேசியவாத எழுத்தின் முன்னோடி, இசை நாடகத்தின் சகல பரிணாமங்களையும் வெளிக்கொணர்ந்த மேதை, ஹிட்லரின் முதன்மையான குரு என வாக்னரின் ஆளுமை சிதறிக்கிடக்கின்றது. இத்தனை முரண்பட்ட ஆளுமையான இவரைப் பற்றி பல ஆவணப்படங்கள் உள்ளன. அதில் பிபிஸி குழுவினர் உருவாக்கிய ‘Great Dates’ மிக முக்கியமானது.... Continue reading
Posted Mar 18, 2012 at வார்த்தைகளின் விளிம்பில்
Comment
1
Hello, Goodbye புகைப்பழக்கம்
புகைப் பிடிப்பதை நிறுத்தி இன்றோடு மூன்று ஆண்டுகள் ஆகின்றன. கல்லூரி நாட்களிலிருந்து தொடர்வோம் துறவோம் மறவோம் என இருந்தாலும் அவ்வப்போது நிறுத்தியிருக்கிறேன். முழு முற்றாக நிறுத்தி அப்பழக்கத்தை துறந்தது என்றால் கடந்த மூன்றாண்டுகளாகத்தான். இந்தப்பழக்கத்தை நிறுத்துவதால் வரும் விளைவுகளைத் தொகுக்கும் எண்ணத்தோடு, கீழுள்ள பதிவை அவ்வப்போது எழுதி வந்தேன். சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது. * சிகரெட் பற்றவைத்தபின் ஊதி அணைக்கும் தீக்குச்சிப் புகை கண்ணில் புகுந்து கலக்கமுறச் செய்யாத புகைவாசிகளே இருக்க முடியாது. கடைசி சிகரெட் வரை இந்தப் பிரச்சனை எனக்கு இருந்தது. உரசிப் பற்ற வைத்தவுடன் கண்களை மூடியபடி குச்சியை அணைத்துவிடவேண்டும் என ஒவ்வொரு முறையும் நினைப்பேன். இன்று அணைத்த கடைசி குச்சியும் கண்களைக் குளமாக்கியது. அது ஒரு எரிச்சல் தான். சுகமான எரிச்சல். முதல் இழுவைக்காக எதையெல்லாம் பொறுத்துக்கொள்ள வேண்டியதாக உள்ளது! கிட்டத்தட்ட பன்னிரண்டு வருடப் பழக்கம். பழக்கத்தை விடும்போதாவது கற்றுக்கொள்ளவில்லை என்றால் இந்தப் பழக்கத்தை எதற்கு... Continue reading
Posted Mar 16, 2012 at வார்த்தைகளின் விளிம்பில்
Comment
7
செல்லமே செல்லம்.
என் மகள் ஆதிராவுக்கு இரண்டரை வயதாகிறது. அவள் பார்ப்பதற்காக சில குழந்தைத் தமிழ்ப் பாடல் குறுந்தகடுகளை கடந்த இரண்டு வருடங்களாக வாங்கிக்கொண்டிருக்கிறேன். பல வண்ணங்களில் விதவிதமான அனிமேஷன் யுத்திகளுடன் ஆங்கிலத்தில் பல காணொளிகள் இருக்கின்றன. ஆனால் எத்தனை காலத்துக்குத்தான் டிவிங்கிள் டிவிங்கிள், ஜாக் அண்ட் ஜில் பார்ப்பது? தமிழில் வரும் குழந்தைப் பாடல் தொகுப்புகளின் அனிமேஷன் நன்றாக இருக்காது, இருந்தாலும் தமிழ் பாடல்களை ஏன் கேட்க வேண்டும் என்பதே என் நண்பர்கள் பலரின் வாதமாக இருந்தது. மேற்படியாளர்களுக்கு பெரிய விளக்கங்கள் அளிக்காமல் தொடர்ந்து பல பாடல் தொகுப்புகளை வாங்கிக்கொண்டிருந்தேன்.மிகத் தரமான பல குறுந்தகடுகள் அகப்பட்டன. கடந்த வருடம் இந்தியா சென்றிருந்த போது அபிராமி ரெகார்டிங் கம்பெனி தயாரித்துள்ள செல்லமே செல்லம் தொடர் பாடல்களையும், மேஜிக் பாக்ஸ் எனும் விற்பனையாளர் தயாரிக்கும் குறுந்தகடுகளையும் வாங்கினேன். இப்போதெல்லாம், ஆதிரா பார்க்காவிட்டாலும் நான் தினமும் ஒரு முறையாவது பார்த்துவிடுகிறேன். மிக அழகானப் பாடல் வரிகள், உறுத்தாத... Continue reading
Posted Mar 14, 2012 at வார்த்தைகளின் விளிம்பில்
Comment
0
ஐந்தாம் நாள்: உருக்கமான தந்திகள் - நவீன டாங்கோ
ஐந்தாம் நாளான இன்று லண்டன் இசை நிகழ்ச்சிக்காக யூஸ்டன் எனும் பகுதியில் இருந்த புனித மேரி மேக்தலின் தேவாலயத்துக்குச் சென்றேன். அலுவலகத்திலிருந்து கிளம்பும்போதே நேரமாகிவிட்டது. வழியும் தெளிவாகத் தெரியாது என்றாலும் வாரன் வீதி தரையடி ரயில் நிலையத்திலிருந்து பக்கத்தில் தான் இருக்கிறது என மேப்பில் போட்டிருந்தார்கள். அதை நம்பி நடக்கத்தொடங்கியதில், சிறு சதுக்கத்தின் மூலையில் மறைந்திருந்த தேவாலய வாசலைத் தாண்டிச் சென்றுவிட்டேன். ஆங்காங்கே வழி கேட்டபின் தேவாலயத்துக்குள் செல்வதற்குள் நிகழ்ச்சி தொடங்கி பத்து நிமிடங்கள் ஆயிருந்தன. இது மிகவும் பழைய பரோக் பாணி தேவாலயம். மர வேலைப்பாடுகள் மிகுந்த உயரமான வளைவுகள் ஆலயத்தின் உயரத்தை அதிகமாகக் காட்டியது. இன்றைய நிகழ்ச்சியில் பீத்தாவனின் பியானோ ட்ரியோவும், ஷுபர்டின் பியானோ ட்ரியோவும் இசைப்பார்கள் எனப் போட்டிருந்தது. தேவாலயத்தின் மூலையில் இருந்த சிறு மேடையில் பியானோ, வயலின் மற்றும் செல்லோ கலைஞர்கள் இசைத்துக்கொண்டிருந்தனர். கூட்டம் கம்மிதான். இருபது நபர்களுக்கும் குறைவாகவே இருந்தனர். சத்தம் போடாமல் கடைசி... Continue reading
Posted Mar 1, 2012 at வார்த்தைகளின் விளிம்பில்
Comment
1
நான்காம் நாள் நிகழ்ச்சி: இசை இசைக்காக - பிரான்ஸிஸ் புலென்க்
நான்காம் நாளான இன்று நவீன பிரெஞ்சு இசையமைப்பாளரான பிரான்ஸிஸ் புலென்க் (1899-1963)அமைத்த இரு இசைப்பாடல்கள் நிகழ்த்தப்பட்டன. இது ஹால்பர்ன் பகுதியில் இருந்த புனித ஆண்ட்ரூ தேவாலயத்தில் நடைபெற்றது. டடாயிஸத்தின் கொள்கை பரப்புத் தலைவராக இருந்த புலென்க் மிக வித்தியாசமான சாஸ்திரிய சங்கீதப் படைப்புகளை வழங்கியுள்ளார். இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் வாழ்ந்த இவரது வாழ்க்கை அக்காலகட்டத்து ஐரோப்பா போலக் குழப்பம் நிறைந்தது. பல வகை இசங்களும் புது பாணி முயற்சிகளும் மட்டுமே கலை என நம்பிய பல எண்ணிலடங்கா மேதைகள் வாழ்ந்த காலகட்டம். அந்த அலையில் மிக முக்கியமானவர் எனக் கருதப்படுபவர் புலென்க். நான் அவரது படைப்புகளைக் கேட்டதில்லை என்பதால் இந்த நிகழ்ச்சிக்குச் செல்ல தீர்மானித்தேன். நேற்று போல மனக்கணக்கு தப்பவில்லை. எப்படிப்பட்ட இசையாக இது இருக்கும் என நினைத்திருந்தேனோ அப்படியே இருந்ததில் உள்ளூர கொஞ்சம் மகிழ்ச்சி. அடோனல் எனும் இசை வகையை அறிமுகப்படுத்திய ஸ்ட்ராவின்ஸ்கி, ஷோன்பெர்க் வாரிசாக புலென்க் போற்றப்படுகிறார்.... Continue reading
Posted Feb 29, 2012 at வார்த்தைகளின் விளிம்பில்
Comment
0
லட்சிய இசை - டெபுஸி, சோபின், ஷுபர்ட் பின்னே இளையராஜா!
லண்டன் இசை நிகழ்ச்சியில் மூன்றாம் நாளான இன்று மதியம் மூவர் இசை. பீத்தாவன், டெபுஸி, சோபின் - மூவரும் பத்தொன்பதாம் நூற்றாண்டு இசையமைப்பாளர்கள். ஒரே நாளில் பல அரங்கங்களில் மதிய நேர இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. பொதுவாக, என் அலுவலகத்துக்கு அருகே இருக்கும் அரங்கத்தை மட்டுமே இதுவரை தேர்ந்தெடுத்து வந்தேன். ஆனால், பல இடங்களிலும் நிகழ்ச்சி நடப்பதால் இசை நிரலை ஒரு முறை நோட்டம் விட்டபின் செல்லும் வழக்கத்தைத் தொடங்கலாம் என்றிருக்கிறேன். பிரத்யேகமான காரணம் என எதுவுமில்லை என்றாலும், பல தேவாலையங்களில் ஒரு குறிப்பிட்ட வகை இசையை மட்டுமே வாசிக்கின்றனர். இருபதாம் நூற்றாண்டு இசை எனும் நவீன வகைகளின் ஆத்திகவாதம் ஒவ்வாதது ஒரு காரணமாக இருக்கலாம். கடந்த ஐந்து நூற்றாண்டுகளாக வளம் பெற்று வரும் மேற்கத்திய சாஸ்த்ரிய சங்கீதத்தை இசை விமர்சகர்கள் பலவிதங்களில் வகைப்படுத்தியுள்ளனர். பதினெட்டாம் நூற்றாண்டில் தூய சாஸ்த்ரிய சங்கீதம், பத்தொன்பதாம் நூற்றாண்டு கற்பனாவாதம், இருபதாம் நூற்றாண்டு பின்நவீனத்துவ இசை... Continue reading
Posted Feb 28, 2012 at வார்த்தைகளின் விளிம்பில்
Comment
1
நாத வினோதங்கள், நடன சந்தோஷங்கள் - செயிண்ட் சான்ஸ்
இன்று மதியம், லண்டன் இசை மாத நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, புனித ஆன் தேவாலையத்தில் ரசித்த இசை - செயிண்ட் சான்ஸ் அமைத்த பியானோ ட்ரியோ (E minor Op 92) பீத்தாவனுக்குப் பிறகு மிகப் பிரம்மாண்டமான இசை அலங்காரங்களை அமைத்தது செயிண்ட் சான்ஸ் (Camille Saint-Saens, 1835-1921) எனும் பிரெஞ்சு இசையமைப்பாளர். மொசார்டை விட செயிண்ட் சான்ஸ் மிக அற்புதமான இசையமைப்பாளர் எனப் பல இசை விமர்சகர்கள் கருதுகிறார்கள். சிறுவர்களுக்கான இனிய எளிமையான இசை பாணிகளை பிரயோகித்து இசையமைத்தவர் என மொசார்ட்டை சில இசை விமர்சகர்கள் குற்றம் சொல்கிறார்கள். தன்னியல்பாக இசையில் அமையக்கூடிய படைப்பியல்பை மட்டுப்படுத்தி சில சட்டகங்களுக்குள் அடைக்கப் பார்த்தவர் என்பதே அவர் மேலுள்ள குற்றச்சாட்டு. அப்படி என்ன தான் செய்தார்? ராக பிரயோகங்களையும் சாத்தியங்களையும் மிக விரிவாக வெளிப்படுத்தக் கூடியது கர்னாடக சங்கீத ஆலாபனைகள். லயக் கட்டுப்பாடில்லாமல் பாடகரின் கற்பனைக்கு ஏற்றார்போல ராகத்தின் சில விஷேசப் பிரயோகங்களை மிக... Continue reading
Posted Feb 27, 2012 at வார்த்தைகளின் விளிம்பில்
Comment
0
லண்டன் கலை நிகழ்ச்சிகள் - மேற்கத்திய சாஸ்த்ரிய இசை.
காண்ட்ராக்ட் முடிந்த ஒரு இடைவேளைக்குப் பிறகு புது வேலைக்குப் போகத் தொடங்கிவிட்டேன். பழைய பிராஜக்டையே சரியா முடிக்கலை திரும்ப வந்து முடிச்சிட்டுப் போ எனக் கூப்பிட்டதால் அங்கேயே மறுபடியும் அடைக்கலம். போன மாதம் திடீரென காண்ட்ராக்ட் முடிந்து வேலை போனபோது, அடடா என்னடா இது புது அலுவலகத்தைச் சுற்றி பல முக்கியமான இடங்கள் இருக்கே அதையெல்லாம் பார்க்கலியே என வந்த எரிச்சலை இப்போது தவணை முறையில் சரி செய்துவருகிறேன். நான் வேலை செய்யும் செண்ட்ரல் லண்டன் அலுவலகத்தைச் சுற்றி பல கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்த வாரம் முதல் நேரம் கிடைக்கும்போது ஒவ்வொன்றாகப் பார்க்க உத்தேசம். 1. சார்லஸ் டிக்கன்ஸின் இருநூறாவது ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, லண்டனின் பல இடங்களில் அவரது படைப்புகள், வாழ்க்கைப் பற்றிய கண்காட்சிகள் நடக்கின்றன. அவற்றில் ஒன்றாவது பார்த்துவிடவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. என் அலுவலகம் இருக்கும் ஹால்பேர்ன் பகுதியில் தான் The... Continue reading
Posted Feb 24, 2012 at வார்த்தைகளின் விளிம்பில்
Comment
0
More...
Subscribe to BeyondWords’s Recent Activity